வாஸ்ட் ஆப்பை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக்
சமூகவலைதளங்களில் முன்னணி தளமாக இருந்து வந்த பேஸ்புக்கை, வாட்ஸ் ஆப் பின்னுக்கு தள்ளியுள்ளது.
பேஸ்புக்கை விட வாட்ஸ்ப் ஆப்பில் தான் அதிகமாக செய்திகள் பகிரப்படுகின்றன என்று டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட் 2017 ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
5 கண்டங்களில், 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து வெளியான டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட் 2017 என்ற ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
வாட்ஸ் ஆப் செயலியின் மூலம் 15 சதவீதமும், பேஸ்புக் மெசஞ்சர் மூலம் 8 சதவீதமும், ஸ்நாப்சாட், வைபர் மூலம் 2 சதவீதமும், வீசாட் மூலம் 1 சதவீதமும் செய்திகள் பகிரப்படுகின்றன என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
அதிகபட்சம் மலேசியாவில் 51 சதவீதம் பேர் வாட்ஸ் ஆப் மூலம் செய்திகளைப் பகிர்கின்றனர் எனவும் அமெரிக்காவில் 3 சதவீதம் மட்டுமே செய்திகளைப் பகிர்கின்றனர் எனவும் அந்த ஆய்வு கூறுகின்றது.

Comments
Post a Comment