அரசு அதிகாரிகளின் ஊழலுக்கு ஆப்பு வைக்க வருகிறது புதிய மென்பொருள்
அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் செய்யும் ஊழலை கண்டறியும் விதமாக புதிய மென்பொருளை மத்திய அரசு தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு பணிகளில் ஏற்படும் தாமதங்கள், மற்றும் அதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் விதமாக ஆன்லைன் மென்பொருள் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மென்பொருள் முதலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விரைவில் இந்த மென்பொருள் அரசின் அனைத்து துறைகளிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழல் அதிகாரிகள் கண்டறியப்பட்டு, உடனடியாக தண்டனை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment