இளையதளபதி விஜய் இவர்களுக்காக குரல் கொடுப்பாரா?
இளையதளபதி விஜய் வெளியே தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார். இதனாலேயே இவரின் மீது பலருக்கும் தனி மரியாதை உள்ளது. ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் இவர் திரைப்படத்துறையினருக்கு நிதியுதவி செய்து வருகிறார்.நமது தளத்திலும் அது பற்றிய தகவல்கள் வெளியிட்டிருந்தோம். அதேபோல பொது விசயங்களான ஜல்லிக்கட்டு, விவசாயம் என பலவற்றிற்கும் அவர் குரல் கொடுத்து வருகிறார்.
தற்போது சினிமா துறை மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரியை குறைக்க கோரி திரையரங்க உரிமையாளர்கள் மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழர்கள், விவசாயிகளுக்காக முன் வந்த விஜய் இவ்விசயத்தில் திரைப்படத்துறை தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பார் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Comments
Post a Comment